23வது நாளாக தொடரும் யுத்தம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 23-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது.

இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

போரில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதினால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்,

என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும் நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள்’ என தெரிவித்துள்ளார்.

எனினும் இப்போரின் காரணமாக பல்வேறு நாடுகளில் மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *