மனிதம் இல்லாத தேசத்தில

ஆசையை

சுமந்த

மனிதர்கள்

இனி

அமைதி

ஆவது

எங்கனம்?

தேவையை

விரும்பி

நாடும்

மனிதர்கள்

இனி

அமைதியை

பெறுவது

எங்கனம்?

இனம்

மொழி

மதம்

நாடு

கலாச்சாரம்

பண்பாடு

என்று

அழிந்து

போகும்

மனிதர்கள்

இனி

அமைதியை

தரிசிப்பது

எங்கனம்?

தனக்கு

வேண்டியதை

வைத்து

கொண்டு

தனக்கு

வேண்டாததை

ஆகாததை

கொள்கை

தத்துவம்

விஞ்ஞானம்

வளர்ச்சி

ஒருமைப்பாடு

தேசியம்

தெய்வீகம்

என்று

பிறர்

மேல்

திணிப்பதற்கு

பெயர்

என்ன?

இந்தியர்கள்

ஒருநாள்

மதத்தை

மொழியை

கூட

தியாகம்

செய்யலாம்.

சாதியை

தியாகம்

செய்ய

முதலில்

மனிதர்கள்

தயாரா?

இருக்கும்

உயிர்

உன்னத

தலைவர்கள்

எல்லாம்

சாதி

சங்கிலியில்

பிணைக்கப்பட்டு

அடிமைகளாயினர்.

அவர்கள்

தங்கள்

சாதியிலிருந்து

விடுபடாதவரை

அமைதி

எங்கனம்

பிரவாகமாகும்?

சலனம்

இல்லாத

இடத்தில்

சப்தம்

இல்லாத

இடத்தில்

மனிதர்கள்

இல்லா

கானகங்களில்

ஒருவேளை

அமைதி

பிறக்கலாம்.

மனிதநேயம்

தன்

எல்லா

தக்கவைப்பு

தன்மையையும்

இந்த

பிரபஞ்சத்திலிருந்து

அழித்துபோட்டது.

கல்வி

மருத்துவம்

வியாபாரம்

ஆனது.

அரசு

சாராய

ஊறல்

ஆலைகளில்

கொடிகட்டி

பறக்கிறது.

குடும்பங்கள்

குடி

போதை

நடத்தை

இவைகளில்

நான்று

கெட்டது.

மனம்

அதன்

விலை

இங்கு

கொடுக்க

யாரால்

இயலும்.

அன்பு

மனிதம்

இல்லாத

தேசத்தில்

மீண்டும்

காந்தி

வந்தால்

நூறு

கோட்சே

வருவான்.

இயேசு

வந்தால்

ஆயிரம்

பரபாஸ்

வருவான்.

புத்தன்

வந்தால்

ஓராயிரம்

அங்குலிமாலன்

வருவான்.

கிருஷ்ணன்

வந்தால்

ஆயிரம்

சிசுபாலன்

வருவான்.

இங்கு

உயர்ந்த

தலைவர்கள்

பிறந்தனர்.

வாழ்ந்தனர்.

அறம்

தழைக்க

பாடுபட்டு

ஆயுள்

இழந்தனர்.

வள்ளலார்

ஷீர்டி

பகவான்களே!

கூண்டில்

ஏறினர்?

நாம்

எம்மாத்திரம்?

நிறைய

கேட்டுவிட்டோம்.

கடைபிடிக்க

இங்கு

எல்லோரும்

அரிதில்

கடத்திகள்.

அமைதி

ஒர்

நாள்

ஒரு

ஷணம்

வெடித்து

இந்த

பிரபஞ்சம்

சிதறும்.

அதற்கு

மேல்

எங்கும்

நிரந்தர

அமைதி

தான்.

கடவுள்

தன்

தவறுக்கு

கோடி

முறை

தற்கொலை

செய்துகொள்வானே!

அல்லால்

மீண்டும்

மனிதனை

படைக்க

மாட்டான்.

அவன்

புகழ்

இகழ்

எல்லாவற்றையும்

ஓர்

மிடறில்

குடித்து

தனது

மந்திரத்தில்

மதிமயங்கி

சாவான்.

அது

வரை

போர்

மோகம்

காமம்

போதை

படுகொலைகள்

ஆசைகள்

விபத்துக்கள்

எதிர்பார்ப்புகள்

தேவைகள்

இங்கு

குறையபோவதில்லை.

அமைதி

விலாசம்

இல்லாத

கடிதம்.

அது

இந்த

பிரபஞ்சத்திடம்

சேர்வது

அரிது.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *