பாசம் என்ற பெயரில் வேசம் காட்டியவர்கள் இவர்கள்…!

பாசம்!!

பாசமென்ற,வேசமதில் பாழும்கிணறென்று தெரியாமல் பாவிநானுந்தான் விழுந்தேன்!

பாசம் என்றமூன்றெழுத்தால் என்னைக்கட்டிப்போட்ட உறவுகள் தன்தேவைகள் முடிய கழற்றிவிட்ட அவலந்தான் என்ன??

எண்ணிப்பார்க்கிறேன் ஏக்கப்பெருமூச்சிடுகிறேன்!


என்தவறை உணருகிறேன்
ஏதுமறியாமல் தடுமாறுகிறேன்!


வஞ்சிக்கப்பட்ட நான் வலுவிழந்து போனேன்!


புத்திக்கு தெரிவது மனதுக்கு புரியாத காரணத்தால் இன்னும் ஏமாறுகிறேன்!


என்நிலை எண்ணி வெட்கமும்,வேதனையும் பரிசாகப்பெற்றேன்.


எப்படி இந்தப்பாசக்கயிறை அறுத்து நானும் வெளிவர திக்குத்தெரியாத காட்டில் கண்தெரியாதவள் தவித்த தவிப்புபோல் தடுமாறிநிற்கின்றேன்,நானே!!!

கோமதிசிதம்பரநாதன்,உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *