இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கை அணி நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

அத்துடன் இந்தத் தொடரிலேயே இலங்கை அணி படுமோசமாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் அணியில் வினைத்திறனான மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தி, இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை பொது அமைப்பு ஒன்று சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *