சிதைவுகளா இவை?

யாசகம்

வாங்குபவன்

மனநிலை

தின்மையா?

தொய்வா?

அறிவா?

அறியாமையா?

மானம்

ஈனம்

சிந்திய

சிதைவுகளா?

சிதையா?

ஈகை

இரக்கம்

கருணை

இவைகளின்

வெளிப்படுதலா?

தர்மத்தின்

அர்த்த

பந்தமா?

பாசமா?

கர்ம

பலன்களின்

மேல்

இச்சையா?

புண்ணியத்தின்

புகலிடமா?

ருசி

பசி

அறியாத

வயிற்றின்

பஞ்சபடியா?

உடல்

மொழியின்

தலைகனமா?

தலைகுனிவா?

கைகளின்

ஏற்றத்தை

தாழ்வை

சொல்லும்

நிகழ்வா?

நிலையாத

செல்வத்தின்

தத்துவத்தை

உணர்த்தும்

பயண

மொழியா?

யாசகம்

கேட்பவனின்

வலி.

கொடுப்பவனின்

இறுக்க

தாராளத்தின்

தகைமை.

கொடு

கற்றதை

பெற்றதை

அறிவை

விஞ்ஞானத்தை.

கடவுள்

ஆனாலும்

அவனுக்கு

நீ

கொடுப்பவனாக

இருக்க

தழைக்க

செழிக்க

வாழ்த்துகின்றேன்.

கொடுப்பவன்

கை

மேலும்

உயரட்டும்.

பிறன்

கண்

கலை

சோகம்

வயிறு

பசி

நோய்

வேதனை

கண்ணீர்

இவை

வலிகளை

உருவாக்கும்

முன்

யாசகம்

பெறப்பட

தரப்பட

வாழ்த்துக்கள்.

எல்லா

புண்ணியங்களும்

யாகங்களும்

தவங்களும்

சாபங்களும்

வாழ்த்துக்களும்

பழிப்புகளும்

புகலிடமாவது

யாசகம்.

யோசி

நிறைய

ஒன்றை

யாசகம்

கேட்கும்

முன்.

உயிர்

போனாலும்

கேட்பதை

விட

கொடுப்பதற்கு

ஆசைப்படு.

கர்ணன்

உனக்கு

கால்

பிடிப்பான்.

கிருஷ்ணன்

உனக்கு

கால்

அளப்பான்.

மரக்கால்

அளக்க

இயலாத

அளவையின்

கணக்கை

அளவிடா

யாசகம்.

அகம்

புறம்

குழைய

ஆனந்தப்பட

உருகி

மருகி

மயிர் கால்

கூச்செரியும்

ரோமபுரி

பட்டிணம்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *