சட்டத்திட்டங்கள் சரியாக அமைந்தால்..!

யாசகர் எவருமில்லா
நாடு எதுவோ …அதுவே
நனி சிறந்த நன்னாடு …
சட்ட திட்டங்களைச்
சரியாய் தீட்டி …!


உழைத்துப் பிழைக்க
வேலையும் ,
வேலைக்கேற்ற
ஊதியமும் சரிவர
வகுத்துக் கொடுத்தால் …
மாற்றுத் திறனாளிகளுக்கும்
வேலை கொடுக்கலாம் …!


யாசிப்பு என்கிற சொல்லே
இல்லாமல் ஆக்கலாம் …
நல்லதொரு அரசு
அமைந்து …அதற்கேற்ற
அதிகாரிகள் அமைந்தால் …
யாசக நெருப்பு எங்கே
பற்றும் …கொலை , களவுகள்
எப்படி நடக்கும் …!


சரியாய் திட்டமிடாப்
போக்கும் …சுய நல
வேட்கையில் ஆள்வோர்
பேராசையுமே …
இங்கே ஏற்ற இறக்கம் ,
மேல் கீழ் நிலைமை …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *