தற்கொலை..!

தற்கொலை

தீராத மனக் குழப்பத்தில்…
நினைத்தவுடன் மரணம் தழுவி
வேதனைகளுக்கு முற்றுப் புள்ளிகள் இடுவதாய்
வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளிகள்.

தற்கொலை. நொடிப்பொழுதில் மரணம்
புற்று நோயினும் கொடிய வியாதி.

துக்கங்கள் நிரம்பி வழிகையில்
வலிகளில் வழியறிவதில்லை
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்”
தற்கொலை ஒன்றைத் தவிர..

காதல் தோல்வியோ, கடன் தொல்லையோ
இன்னுமாய் தொல்லைகளில்
இரணப்படுகையில்
துன்பங்கள்
மரண வாசலின் திறவுகோலாய் ..
திறந்து வைக்கிறது
வரவேற்பு கூறி.

துக்கம் பகிருங்கள் மனங்கள் திறந்து
பக்கம் வருவதில்லை மரணம்

இன்றைய ஏமாற்றங்கள்
நாளை மாற்றப்படலாம்
நம்பிக்கை விளக்கு சுடர்விடுகையில்
மரண இருட்டு விலகுகிறது..

துன்பத்தின் போதான “தனிமை”
பொல்லாதது
சுருக்குக் கயிறை நீட்டும்
தூக்க மாத்திரைகளை நினைவுபடுத்தும்
ஓடும் இரயிலின் முன் நிறுத்தும்..!!

மரண தூதுவனான
தனிமையைக் கொல்லுங்கள்
துன்பதின்போதேல்லாம்
துணை கொள்ளுங்கள்
தற்கொலை தற்கொலை செய்துகொள்ளட்டும்.

உஷா வரதராஜன்.
பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *