பிரார்த்தனை கூட யாசகம் தான்- எழுதுபவர் கவிஞர் கேலோமி

யாசகம்
யாசிப்பவனுக்கும்
கொடுப்பவனுக்கும்
நடக்கும்
சமர்.


எதிர்பார்ப்பவனுக்கும்
வழங்குபவனுக்கும்
நடக்கும்
புரிந்துணர்வு
ஒப்பந்தம்.


வேண்டுதலின்
மடை
மாற்றம்.


இங்கு
யாசகம்
கேட்காதவன்
எந்த
மதத்திலும்
மொழியிலும்
இல்லை.


வேண்டுதலும்
பிராத்தனையும்
கூட
யாசகத்தின்
படிநிலை
தான்.


கடவுள்
இயற்கை
மனிதன்
உயிர் வாழிகள்
எல்லாம்
யாசகத்தின்
விளைபொருட்களே!


இங்கு
கூக்குரலும்
சப்தமும்
அழுகையும்
புலம்பலையும்
கண்ணீரையும்
காவு
வாங்காத
யாசகம்
எங்கே?


துன்பம்
பிற
உயிர்
துயர்
களைப்பை
போக்குமெனில்
யாசகம்
கூட
இராஜபாட்டை
தான்.


யாசகம்
வாங்குபவன்
நன்றாக
வாழட்டும்.
கொடுத்தவன்
புகழ்
ஒங்கட்டும்.


எங்கும்
எதிலும்
சப்தம்
இல்லாமல்.

கேலோமி
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *