மேலும் 02 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் கடுமையான தாக்குதலை நடத்தி வந்தது. இந்நிலையில் பல நாடுகள் போரை நிறுத்து மாறு கோரிக்கை விடுத்தன எனினும் இஸ்ரேலானது அதற்கு இணங்க வில்லை. இந்நிலையில் தான் அமெரிக்கா,எகிப்து,கட்டார் ஆகிய நாடுகளின் போர் நிறுத்த மத்தியஸ்தின் விளைவாக 4 நாள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேலானது முன் வந்தது.

இந்த போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணையக்கைதிகள் 50 ற்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு அவர்களுடைய குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்கள்,வயதானோர்,பிள்ளைகள் என்போர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

போர் நிறுத்த ஒப்பந்தம் 2 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டமையானது மகிழ்ச்சியளிப்பதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *