தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 3 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றைய மதியம் முடிந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 165 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன்,290 பேர் காயமடைந்துள்ளனர்.இதனை ஹமாஸ் அமைப்பின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 422 உயர்ந்துள்ளது.இதே வேளை 65 ஆயிரத்து 87 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதே வேளை இஸ்ரேலானது பாலஸ் தீனத்திற்கான அடிப்படை வசதிகளையும் தடை செய்துள்ளது.இந்நிலையில் அல் அமல் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான ஒக்சிஜன் சிலிண்டர் தீர்ந்த நிலையில் நோயாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கஸாவின் நஸர் வைத்திய சாலை ,அல் அமல் வைத்திய சாலை ஆகியவற்றின் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரண்டு நாட்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *