இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

ஈரான் ஆனது இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.இஸ்ரேலின் இரணடு விமான தளங்களை குறிவைத்து குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் நெவாதிம் விமானதளத்தின் மீது 5 பொலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதன் போது c-130என்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்றும்,ஓடுபாதை மற்றும் கிடங்குகள என்பனவும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

இதே வேளை 79 ஆளில்லா விமானங்கள்,3 ஹைப்பர் சோனிக் ரக ஏவுகணைகள் என்பனவும் ஏவப்பட்ட நிலையில் ,அவைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சிரியாவில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தின் மீது அண்மையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.இதன் போது பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *