காலம் கருதாத சேவகன்..!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அப்பா…
“””””””””””””””””””
கருவைச் சுமந்த
தாயை விடவும்…
காத்து நிற்கும்
இறையை விடவும்…

கருணை மிக்க
காவலனாய்…
காலம் கருதா
சேவகனாய்…

உதிரம் சிந்தி
ஊதியம் செய்து…
உயர்வை வளர்க
உழைத்தவர் நீரே…

தெய்வம் நூறு
உண்டு உலகில்…
உம்மை போன்று
உண்டா உலகில்…

இன்னொரு ஜென்மம்
இருக்குமானால்
உனக்கு தாயாய்
வாய்த்திட வேண்டும்…

பட்ட கடனை
மிச்ச மின்றி
பார்த்து பார்த்து
செய்திட வேண்டும்…

அன்புடன் :
வேல் முருகன்
சுப்ரமணியம்…
தெலுக் பங்ளிமா
காராங்,
சிலாங்கூர்
மலேசியா.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *