ஜபாலியா அகதி முகாம் மீது வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 100 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது.

காஸாவின் தெற்கு பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி தாக்குதல்,தரைவழி தாக்குதல் என்பவற்றை இஸ்ரேலானது மேற்கொண்டுவருகிறது.

மருத்துவமனைகள்,வீடுகள்,சுரங்க பாதைகள் போன்றவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திவருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்த ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இஸ்ரேலானது வான்வெளிதாக்குதலை மேற்கொண்டுள்ளது.இத்தாக்குதலுக்கு இலக்காகி சிறுவர்கள்,பெண்கள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கான் யூனிஸ் நகரில் அமைந்துள்ள சிறுவர் வைத்தியசாலை மீது இஸ்ரேலானது நேற்று முன்தினம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *