போருக்கு தயாராக வேண்டும் என வட கொரியா தெரிவிப்பு..!

கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் போருக்கு தயாராகுமாறு தெரிவித்துள்ளார்.

தென் கொரியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகிய வற்றுடன் பனிப்போர் புரிந்துவரும் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் பலவும் அணுஆயுத பரிசோதனை தொடர்பில் வடகொரியாவை எச்சரிக்கின்றன,இதனையும் மீரி வடகொரியாவானது அணுஆயுத சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவில் அமைந்திருக்கும் இராணுவ பல்கலைகழகத்தினை ஆய்வு செய்த பிறகு மேற்கண்ட கருத்தினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *