What’s App இல் பாடசாலைக்கு நிதிசேகரிப்பு|மனித உரிமை ஆணைக்குழு ஆரம்பிக்கும் விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலையொன்றிற்காக whats app வட்சப் ஊடாக தொடர்ச்சியாக நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவமானது யாழ் மாவட்ட வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிதி சேகரிக்கும் திட்டம் பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காகவே சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவால் பாடசாலை அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *