எதிர் வரும் ஆண்டு மின்சார கட்டணம் குறைவடையுமா?

எதிர் வரும் 15ம் திகதி மின்சாரக்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளாக பொது பயன் பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதே வேளை மின்சாரக்கட்டணம் குறைப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் அளவில் மின்சார கட்டணங்களை குறைப்பது குறித்த யோசனைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகளை சுயாதீனமான நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுயதீன கணக்காய்வு நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *