23 விமானங்கள் இடை நிறுத்தப்பட்டன..!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 23 விமானங்கள இடை நிறுத்தப்பட்டன.

கடந்த சில நாட்களாக சிட்னியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சிட்னி விமான நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.இதனால் குறிப்பிட்ட விமான நிலையம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக வெளி நாடுகளுக்கும்,வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் இடை நிறுத்தப்பட்டன.

இதே வேளை இவ் விமான நிலையத்திற்கு வர இருந்த விமானங்கள் பிரிஸ்பேன்,மெல்போர்ன் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பிவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *