என் தேவதை..!

என் தேவதையே !
என் தேவதையே !
என் காதலை
எப்போது ஏற்பாய் ?
என் தேனிசையே !
என் தேனிசையே !
என்னை
எப்போது
ஏறெடுத்து பார்ப்பாய்?

வினாக்குறியாக
நீ போனாலும்
நான்
தொடர்புள்ளியாகி
தொடர்வேன்……
திண்டுக்கல் பூட்டினால்
உன் மனதை
பூட்டினாலும்
நான் திருடாமல்
விடமாட்டேன்…….

உன் கடைக்கண் பார்வை
என் மேல்
விழும் நாள் என்னாளோ?
அந்நாளே
என் வாழ்வின் பொன்னாள்….!

என் வருகைக்காக
நீ காத்திருக்கும் நாள்
என்னாளோ….
அந்த நாளே
என் வாழ்வின் நன்னாள்….

நீ சிலையாக
வருவாய் என்று
என் மனதை
கோகிலாக்கி
வைத்திருக்கிறேன்……
நீ தென்றலாய்
வருவாய் என்று
என் வீட்டு ஜன்னலை
திறந்தே வைத்திருக்கிறேன்…..
விடியலாய்
வருவாய் என்று
என் வாழ்க்கையை
கிழக்காக்கி
வைத்திருக்கிறேன் ……
நீ துணையாக
வருவாய் என்று
நான் தனியாக வாழ்கிறேன்….

கடலில் சேர்ந்த
நதியைப் பிரித்தாலும்….
காற்றில் சேர்ந்த
மணத்தை பிரித்தாலும்……
கண்ணே!
என்னில் இருந்து
உன்னை பிரிக்க
கடவுளால் மட்டுமல்ல
என்னாலும் முடியாது
என்னாலும் அது நடக்காது….. கவிதை ரசிகன் குமரேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *