இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக கண்டி,மாத்தளை,பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மொணராகலை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பதுளை ரயில் நிலையத்திலிருந்து 1கிலோ மீற்றர் தொலைவில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது இதன் காரணமாக ரயில் பாதை பாதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராணுவத்தினர்,ரயில் ஊழியர்கள் இணைந்து வழமைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *