சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 122 பேர் உயிரிழப்பு..!

சிலியில் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்துவருகிறது . இதன் காரணமாக 20 ஹெக்டேயர் நிலபரப்பு எரிந்துள்ளது.

இதே வேளை பல உயிரினங்கள் அரிய வகை தாவரங்கள் என்பனவும் அழிந்துள்ளன.

இதே வேளை தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றனர்.இதனையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் ,தீயணைப்பு படையினர்க்கு பொது மக்களை உதவும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே வேளை காட்டுத் தீ காரணமாக 104 டிகிரி வரை வெப்பநிலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *