பங்களதேஷில் இடம் பெற்ற தீ விபத்தில் 43 பேர் பலி…!

பங்களதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடிக் கட்டிடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தின் முதலாம் தளத்தில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *