தென்கிழக்கு லண்டனில் தீவிபத்து|சிறிலங்காவை சேர்ந்த நால்வர் பலி

தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள பெக்ஸ்லிகீத்(Bexleyheath) பகுதியில் Hamilton வீதியில் அமைந்துள்ள வீட்டில் பரவிய தீயினால் சிறீலங்காவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் சாவடைந்துள்ளனர்.

இவர்கள் சிறீலங்காவின் திருகோணமலை மாவட்டம் உவர்மலை என்ற இடத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

கடந்த 15 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 3 மாதங்கள் இந்த வீட்டில் வாழ்ந்து வந்தவர்களாவார்.

தீ விபத்து சம்பவித்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்தபோதும் நால்வர் சம்பவ இடத்திலேயே மரணம் சம்பவித்ததாக Sky news தெரிவிக்கிறது.

தப்பிய ஒருவர் யன்னல் வழியாக குதித்து கால்கள் முறிந்த நிலையிலும் தனது உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்று london News இணையம் தெரிவிக்கிறது.

இறந்தவர்களில் ஒருவர் அண்மையில் தமது பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக சிறீலங்காவிலிருந்து லண்டன் வந்திருந்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளை தீயணைப்பு படைவீரர்களும் Metropolitan பொலிசாரும் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.