பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 06 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக பாகிஸ்தான் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருவதாகவும் மேலும தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான்,கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதிகளின் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதன் போது பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி,வெடிகுண்டு,உள்ளிட்ட ஆயுதங்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *