உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் கைது..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக குறித்த குழுவினர் ஒன்று கூடினார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பாலமுனை பகுதியில் அமைந்திருக்க கூடிய பள்ளி வாசலுக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சஹ்ரான் ஹாசிமின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கான விசாரணைகள் நிறைவடைந்த பின் அவர்களை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *