ட்ரோனை பறக்கவிட்டவர் கைது..!

ட்ரோன் கெமராவினை அனுமதி யின்றி வானில் பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த இளைஞர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் ட்ரோன் கெமராவினை பறக்க விட்டுள்ளார்.

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவினர்க்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட இளைஞர் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளி நொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *