எதிர் வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம்பழத்திற்கான வரி குறைக்கப்படவுள்ளது..!

பேரிச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி, எதிர் வரும் இரண்டு நாட்களுக்குள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பேரிச்சம்பழம் கிலோ கிராம் ஒன்றிற்கு தற்போது விதிக்கப்படும் 200 ரூபா விஷேட வரி 1 ரூபாவாக குறைக்கப்படும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை இந்த நிவாரணத்தை பெற்றுக.கொள்வதற்காக சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *