பொருட்கள் மீதானா வரி நீக்கப்படுமா..?

அண்மைக்காலங்களில் பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்து. குறிப்பாக 286 பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 800க்கும் அதிகமான பொருட்கள் மீதான வரி நீக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இதே வேளை தற்போது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான வரி நீக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்படும் பட்சத்தில் உச்ச விலைக்கு விற்கப்படும் குறித்த பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றி அறிவிக்கப்படுகிறது.

அதிகப்படியான விலை கொடுத்து பொருள்கொள்வனவில் மக்கள் ஈடுப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை மக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *