10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை..!

10 வயது சிறுமி நேற்றைய தினம் இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

இச்சம்பவமானது மன்னார் தலைமன்னார் கிராமத்தில் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபராலயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில், கணவன் போதைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேகநபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது,

சிறுமியின் சடலம் இன்றைய தினம் அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *