கனவுகள் நனவாகிறது..!
வண்ணக் கனவுகள்
இங்கே
வாழ்கையில்
வண்ண
வண்ணமாய்
கனவுகள்
தினசரியும்
பூத்துப் பூத்து
உதிர்கிறது …
அந்தப் பூக்களில்
ஏதோ ஒரு சில
பிஞ்சாகிக் காயாகிக்
கனிகிறது …
ஆனாலும்
தன்னம்பிக்கை
எனும் நீர்
மட்டுமே அந்தச்
செடியையே
காக்கிறது …
நாம் நீர்
வார்ப்பதை
மட்டுமே தொடர்ந்து
செய்தால் போதும் …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052