கனவுகள் நனவாகிறது..!

வண்ணக் கனவுகள்


இங்கே
வாழ்கையில்
வண்ண
வண்ணமாய்
கனவுகள்
தினசரியும்
பூத்துப் பூத்து
உதிர்கிறது …

அந்தப் பூக்களில்
ஏதோ ஒரு சில
பிஞ்சாகிக் காயாகிக்
கனிகிறது …

ஆனாலும்
தன்னம்பிக்கை
எனும் நீர்
மட்டுமே அந்தச்
செடியையே
காக்கிறது …

நாம் நீர்
வார்ப்பதை
மட்டுமே தொடர்ந்து
செய்தால் போதும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *