தவத்தின் வழி..!

பிறப்பு இறப்பு


இறந்தால்
பிறந்து விட்டுப் போகட்டும்
பிறந்தால்
இறந்து விட்டுப் போகட்டும் …

இந்தத் தொடர் விளையாட்டு …
தொடரும் வரையில்
தொடர்ந்து விட்டுப் போகட்டும் …

இயாருக்கு யார் சொல்லி இதை
மாற்ற முடியும் …அவரவர்
உணர்வே அவரவர் வழியென
சொன்னவர் பல பேர் …

இதைப்
புரிந்தவர் …உணர்ந்தவர் …
தன் வழி செல்லட்டும் ….
இறந்தவர் மீண்டும்
பிறவாமல் இருக்கட்டும் …

அதற்குத்
தவத்தின் வழியே
தன்னுயிர் கண்டு …
இந்த இருப்பின் ஒளியில்
கலந்து நிறையட்டும் …

🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *