இந்த கடற்கரைக்கு சென்று இருக்கிறீர்களா?

நிலா வெளி கடற்கரை

இலங்கை தீவு மிக அழகான தீவு இதில் பலவகையான இயற்கை அம்சங்கள் நிரைந்துள்ளன.

இதில் ஒன்று தான் இலங்கையை சுற்றியுள்ள கடற்கரை பிரதேசங்கள்.

இலங்கையில் அமைந்திருக்கும் பல கடற்கரை பிரதேசங்களில் மிக முக்கியமானதாகவும்,அதிகளவில் மக்களை கவரக்கூடியதாகவும்,அழகிய கடற்கரையாகவும் திகழக்கூடியது திருகோணமலையில் அமைந்திருக்கும் நிலாவெளி கடற்கரையாகும்.

இந்த கடற்கரை அழகினை கண்டுக்களித்திட உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

திருகோண மலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இங்கு தமிழர்கள் ,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என பல்வேறு இன மக்கள் ஒன்றாக இணைந்து வாழும் ஓர் பிரதேசமாக காணப்படுகிறது.

இவ்வாறான மக்கள் வாழும் பிரதேசத்திலேயே இந்த கடற்கரை பிரதேசமும் அமையப்பெற்றுள்ளது.

இந்த நிலா வெளி கடற்கரையை தாண்டி செல்வோமானால் புறா மலை என்ற ஓர் அழகிய சிறிய தீவு காணப்படுகிறது.இந்த தீவு பல முருங்கை கற்பாரைகளொ கொண்டு காணப்படுகிறது. அதிகளவான சுற்றுலா பிரயாணிகள் இந்த தீவிற்கு வந்து இங்கு காணப்படும் கடற் பிரதேசத்தில் குளித்து தங்களுடை நாளை மிக மகிழ்ச்சியாக களிக்கின்றனர்.

உங்களுக்கும் நேரம் கிடைத்தால் இங்கு சென்று பார்வையிட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *