தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும்…!

தோணி முதலிலேயே களமிறங்கி இருக்க வேண்டும் ,ஏனெனில் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இந்த மைதானத்தில் துடுப்பெடுத்தாட தவித்த போது ,தோணி வந்திருந்தால் தனது அனுபவத்தின் மூலம் ஓட்டங்களை எடுத்திருக்க முடியும் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின.

இதில் சென்னை அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனை முன்னுட்டு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை குறிப்பிட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னையணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைபபெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் அணி 18.1 ஓவரில் 166 ஓட்டங்களைப்பெற்று 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *