இப்படியான நிலையில் சடலங்கள் மீட்பு..!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் 39 வயதுடைய திருமணமாகாத ஆண் ஆகிய இருவரே வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்,

சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வரும் உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள மூன்று பிள்ளைகளின் தாயிற்கும்,

இவருடன் உயிரிழந்த திருமணமாகாத ஆணுக்கும் தகாத உறுவு இருந்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில் இவ் இருவருக்குமிடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்கு தெரிய வந்து கடந்த 04 ஆம் திகதி மாலை தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவை பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில்,

இவ் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றையதினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்து வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,

சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து பார்வையிட்டு மரண விசாரணை நடத்திய பின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக,

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற,

கோணத்தில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *