இஸ்ரேலின் எண்ணெய் கிடங்கின் மீது ஈராக் தாக்குதல்..!

இஸ்ரேலின் ஹைபா நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் கை தளமாக கொண்டு இயங்கும் கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது.இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும் இச்சம்பவத்தில் இடம்பெற்ற சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இந்நிலையில் ஈரான்,ஈராக் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் சிரியாவில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதன் போது முக்கிய தளபதிகள் உட்பட 10 ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதன் போது இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *