ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை..!

எதிர்வரும் ரமலான்,தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அனைத்து பணிகளையும் முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலப்பகுதியில் அத்தியவசிய சேவைகளை வழங்குதல்,கழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் மிக விசேட பண்டிகையாக கொண்டாடப்படும் புத்தாண்டை ,மகிழ்ச்சியாக கொண்டாட பொது துறையினர்க்கு அனைத்து ஒத்துளைப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *