ருயாங் தீவில் எரிமலை சிதறல்..!

இந்தோனேசியாவின் ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை அப்பகுயில் வாழும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எரிமலைக்கு அண்மையிலுள்ள 4 கி.மீ க்கு உட்பட்ட பிரதேசத்தில் எவ்வித பணிகளும் மேற்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிமலைக்கு அண்மையிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *