ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி |இது ராஜஸ்தானுக்கு இரண்டாவது தோல்வி

IPL இன் 50 வது போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை ஒரு ஓட்டத்தால் தோற்கடித்தது சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி.

ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இன்றைபோட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்களை ஹைதராபாத் அணி எடுத்தது.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக 42 பந்துகளில் 76 ஓட்டங்களை Nitish Kumar Reddy குவித்தார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களும் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
அதன்படி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்ற சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணித்தரவரிசையிலும் சென்னை அணியை பின்தள்ளி  நான்காமிடத்திற்கு முந்தியது.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சண்ரைசேர்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் தெரிவானார்.


நான்கு ஓவர்கள் பந்துவீசிய புவனேஸ்வர் குமார் , 41 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *