பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது.

இந்நிலையில் தான் ரபா நகரில் அமைந்திருக்க கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேலானது போர் விமானங்கள் மூலம் குண்டு தாக்குதல் மேற்கொண்டது.இதன் காரணமாக குறித்த குடியிருப்பு தரைமட்டமானது.இத்தாக்குதலுக்கு உள்ளாகி 27பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இவ்வாறான தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் அதிகமானவர்கள் சிறுவர்களும்,பெண்களும் உள்ளடங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *