இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை. 

தனது சூழுரைத்த எதிரியான ஈரானின் கை பக்கத்து நாடான சிரியாவில் ஓங்கவிடக்கூடாதென்பது சிரியப் போர் ஆரம்பித்ததிலிருந்தே இஸ்ராயேல் தெளிவாக இருக்கிறது. சிரியாவின் அரச இராணுவம், சிரியாவுக்கு ஆதரவாக அந்த நாட்டுக்குள் இயங்கும் ஈரானிய இராணுவம், ஹிஸ்புல்லா இராணுவக்குழு ஆகியவை சிரியப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே இஸ்ராயேலின் தாக்குதல்களுக்கு பல நூறு தடவைகள் உள்ளாகி வந்தன.

முடியப்போகும் ஆண்டில் 1,200 இராணுவ விமானத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலஸ்தீனப் பிரச்சினையைப் பொறுத்தவரை 176 குண்டுகள் காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேலை நோக்கிக் செலுத்தப்பட்டதாகவும் அவைகளில் 90 திறந்த வெளிகளில் விழுந்ததாகவும்  80 குண்டுகளை இஸ்ராயேலின் குண்டுகளைக் கண்டு தாக்கும் பீரங்கிகள் சுட்டு விழுத்தியதாகவும் இஸ்ராயேல் குறிப்பிட்டிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *