யுனிசெவ் பொன்விழா மாநாட்டில் உரையாற்றும் தமிழ் பெண்

யுனிசெப்வ் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவில் நடாத்தப்படும் பொன்விழா உலக மாநாட்டில் தமிழ் இளம் தலைமுறையினர் சார்பில் இளம்பெண் ஒருவர் உரையாற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil diaspora alliance சார்பில் செல்வி ஞானகுமாரா சாதனா அவர்கள் உரையாற்றவுள்ளார் என்று யுனிசெவ்ப் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மட்டுமல்லாது அதான் அங்கத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் உரையாற்றவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் மக்கள் சமூகங்களுடனான வலுவான கட்டமைப்பு எனும் கருப்பொருளின் கீழ் அமையவுள்ள அமர்வில் இவரது உரையும் இடம்பெறவுள்ளது.

அதன்படி வரும் December 7 ம் திகதி செல்வி சாதனா அவர்கள் Tamil diaspora alliance அமைப்பிலிருந்து பல புலம்பெயர் சமூகங்களின் இளையவர்களில் ஒரு குரலாக தமிழ்மக்கள் சார்பில் உரையாற்றவுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.