வானமகள்

இளங்காலை நேரத்தில்
வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள்.

ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

மறுபுறம் மழை வரப் போகிறேன் என்று கட்டியங் கூறுவது போல மிரட்டும் மேகக் கூட்டங்களும்

இல்லை நான் மழையாக பெய்து உங்களைக் குளிர்விக்க வருகிறேன் என்று இதமாகக் கூறும் மேகக் கூட்டங்களும்

மேகக் கூட்டத்தில் தான் எத்தனை பாகுபாடுகள்

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல மேகங்களின் கம்பீரமும் .

மேகக் கூட்டங்கள் பூமியில் தான் விலங்கினங்களா வானிலும் பல வண்ணங்களில்
பலப்பல விலங்குகள் பாருங்கள் என்று கேட்கிறதோ பலவிதமான மேக உருவங்கள்.!

ஆஹா!
என்ன ஒரு ரம்மியமான காட்சி
ஒரு காலை நேரத்தில் மட்டுமே இவ்வளவு மாயாஜாலங்கள்!
மொத்தத்தில் இளங்காலையில்
வான மகளின் களியாட்டம் என்னவென்று சொல்வது!
ஆம்! நம் வாழ்க்கையில் உள்ள எண்ணங்களின் வண்ணங்கள் போல்
வானிலும் வண்ணங்கள்!
பார்த்து பிரமித்து தான் போனேன்! சில கணங்கள் என்னை மறக்கச் செய்து விட்டாய் வான் மகளே! உனக்கு எனது மகிழ்ச்சியான வந்தனம்…

எழுதுவது ;விஜயலட்சுமி