புத்தகம்

புத்தகம் இல்லா அறை
ஓர் இருட்டறை !

கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட நீ
என் வாழ்வை வண்ணமயம் ஆக்க வந்த தேவதை!

உன் வரிகள் என் அறிவை விரிவு செய்த அற்புத விளக்குகள்!

புத்தகமே நீயே
என் அகத்தின் ஒளியாக இருக்கின்றாய்!

என் கைக்குள் அடங்கிய நீ
என் வாழ்க்கையை ஒளிபெறச் செய்தாய்

ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையையும் செதுக்குகின்ற சிற்பி நீயே!

மனிதனின் மானத்தை காக்க வந்த
நூல் ஆடை நீ!

என் வாழ்க்கைக் கடலை கடக்க உதவும் படகும் நீயே!

உயிரில்லா ஆசானே!
யாரிடமும் தலை குனியாத நான்,
உன்னிடம் தலை குனிகிறேன்

நாளை நான் தலைநிமிர்ந்து நிற்பதற்காக!!

எழுதுவது : சீ.அல்ஸொய்மா (MSC
கணிதத் துறை)
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மண்மங்கலம், கரூர்.