ஊனம் என்னடா ஊனம்

காற்றுக்கு ஏது வேலி
கடலுக்கு ஏது ஆழம்
வானிற்கு ஏது எல்லை
பூமிக்கு ஏது வரம்பு
புகழ்ச்சிக்கு ஏது உச்சம்
ஆசைக்கு ஏது அச்சம்- உன்
திறமைக்கு எதற்கடா கையும் காலும்
முயற்சி ஒன்று போது மே
மார்கம் உன்னைச் சேருமே

வெற்றிகதை தோல்விகதை – நீ
கேட்க வேண்டி தேவையில்லை
துணிந்து வாழும் உந்தன் கதை அனைவருக்கும் முன்கதை

எந்நிலையும் மாறா முயற்சிசெய் மனிதா
உன்னிலையோ மாறும் விரைவில் அதுவா

நீரின்றி அமையாது உலகு- அது
வள்ளுவன் வாக்கு
உன் திறமைக்கு ஏது பூட்டு-இது
உன் வாழ்க்கையின் போக்கு

துணிந்து செல்
வெற்றியடைவாய்

பணிந்து செல்
உயர்ச்சியடைவாய்

எழுதுவது:
கோ.மாலதி சுரேஷ்