வேர் உன்னில் இருக்க
வேர் உன்னில் இருக்க…..!
ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்….!
வாசிக்க புத்தகத்தின் வாசனையும்…!
அதில் உள்ள உயிரின் சாராம்சமும்….!
தெள்ள தெளிவாக புரிய தொடங்கியது….!
அதுபோலவே வாழ்வும் வாழ்வில்….!
நீ ஒன்றுமே செய்யவில்லையென்றால்…..!
வாழ்வும் உனக்கு மூடிய புத்தகமே….!
வரும் வாய்ப்பை பயன்படுத்து…..!
இல்லையென்றால் உருவாக்கு…..!
ஆக்கம் இந்த உலகில் ஆகச்சிறந்த ஒன்று….!
ஏன் வேறு இடத்தில் தேடுகிறாய்….!
வேர் உன்னில் இருக்கும் போது…..!
எழுதுவது ; கவிஞர்.ந.பா.மேஹவர்ஷினி