மானிடம் ஈர்த்த மரங்கள்

மறுசுழற்சி இல்லாத நெகிழிதனை
மண்ணைவிட்டு நீக்கு
மறுவாழ்வு எனக்குண்டு…!

கோடாரி தீக்குச்சி
கொண்டெனை
நெருங்காதே!

குளிர் தென்றல் நான் தந்து குதுகலமாய் உனை மாற்றுவேன்…!

காணும் இடமெல்லாம்
காடுகளாய் மாற்று!

கருமேகங்களாய்த்
திரண்டு உயிர்நீரை உனக்கருள்வேன்…!

கனிவாய் கொஞ்சம் நீ பேசு!

காலநிலை மாற்றம் நான்களைவேன்…!

பேணி எனைக் காத்திட! பெருவாழ்வு அளித்திட! விதைப்பந்து ஒன்றினை நீயெறிந்து
விரைந்தே எனை
விருட்சமாக்கு…

எழுதுவது : திருமதி பெ.மாலையம்மாள்@ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *