மாற்றத்தை விதைப்போம்…

மாற்றத்தை விதைப்போம்…

மாறும் உலகினில் மாற்றம் வேண்டும்!

சாதி மத ஏற்றத்தாழ்வு கூடாது!

தீண்டாமை எண்ணத்தை தீக்கிரையாக்க வேண்டும்!

இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும்!

காமக் கயவர்களை களைய வேண்டும்!

பெண்களை இழிவுபடுத்துபவர்களை இல்லாமலாக்க வேண்டும்!

பிஞ்சுக் குழந்தைகளிடம் நஞ்சை விதைக்காதே!

ஏழைகளின் பட்டினியைப் போக்க வேண்டும்!

அன்பு ஒன்றையே அனைவருக்கும் கொடுப்போம்!

அடிமை எண்ணத்தை அறுத்து எறிய வேண்டும்!

எல்லோரும் சமம் நிலை வேண்டும்!

பாரினில் பகைமை அழிய வேண்டும்!

ஆன்றோர்கள் காட்டிய நல்வழியில் செல்வோம்!

மாற்றத்தை விதைப்போம் மாசுகளை களைவோம்!

மனதில் உறுதி இருந்தால் வெல்லலாம்!

பாரதம் போற்றும் பெயர் பெறுவோம்!

பெற்ற நாட்டிற்கு பெருமை சேர்ப்போம்!

எழுதுவது : ந.ராஜேஸ்வரி
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி கரூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *