நல்வழியில் வாழ்ந்திடுவோம்

உள்ளத்தை உயர்த்திட
ஒழுக்கத்தை பேணிட
வல்லமை பெருக்கிட
வாழவழிவகுத்திடுவோம்

பொல்லாமை ஒழிந்திட
புதுவழி கண்டிட
நல்லவை அறிந்திட
வல்லமை வளர்த்திடுவோம்

சரித்திரம் படைத்திட
சாதனை புரிந்திட
சிந்தித்து செயல்பட
சீர்மிகு கருத்திடுவோம்

கல்வியைக் கற்றிட
கடிந்துரை நீங்கிட
குணத்துடன் வாழ்ந்திட
கொள்கையை கடைபிடிப்போம்

நட்பினை வளர்த்திட
நன்மையைச் செய்திட
நீதியை நிறுத்திட
நெறியோடு வாழ்ந்திடுவோம்

பண்புகள் காத்திட
பாசமுடன் பழகிட
பிரிவினை தடுத்திட்டே
புகழுடன் வாழ்ந்திடுவோம்……

எழுதுவது ;
நாகவதி ஆச்சி, அம்மையார் ,.
மலேசியா,