அன்பு மகளே

எங்கள் வீட்டு வளர்ப்பிறையே
என் இதய தேவதையே


நீ பூத்த நாள்முதலாய்
நீங்கா மகிழ்ச்சியை அள்ளித் தந்தவளே!


சின்னஞ்சிறு சிரிப்பாலே – அனைவரையும்
சிறைப்பிடித்து வைத்தவளே!


குயில் போன்ற உந்தன் குரலால்
அனைவரையும் கட்டி மயக்குபவளே!


எந்த ஒரு செயலிலும் – தானே
முதலாவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவளே!


முடியாது என்பது என்னுள் இல்லை -என்று
விடாமுயற்சியுடன் செயல்படுபவளே!


என் வீட்டு தேவதையே
சின்னசிறு சண்டையிட்டாலும் – அடுத்த நிமிடமே
அம்மா என்று கட்டி அணைப்பவளே!


எத்தனை துறைகளில் சாதித்தாலும்
இன்னும் வேண்டும் வேண்டும்
என்று விடாமுயற்சியுடன் இருப்பவளே!


தனக்கு எல்லாம் தெரியும் என்று
சிறு கர்வம் கூட இல்லாமல்
நாளுக்கு நாள் உந்தன் தரமும் உயர்கிறது


நீயும் மிளிர்கிறாய்!
உன்னை பெற்றதனால் நானும் மிளிர்கிறேன்
என் அன்பு மகளே!

எழுதுவது : திருமதி க.பாலா
உதவி பேராசிரியர்
கணிதத்துறை
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மண்மங்கலம் கரூர்