இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ்|போராடித் தோற்றது மொரோக்கோ

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் மீண்டும் நுழைந்தது.

முதல் ஆபிரிக்க அணியாக அரையிறுதிப்போட்டிக்கு வந்த மொரோக்கோ அணி இறுதிவரை போராடி எந்தக்கோல்களும் அடிக்காமல் தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் காட்டிய பிரான்ஸ் அணி, ஆரம்பத்திலேயே முதற்கோலை அடித்து முதற்படி ஆட்டத்தின் போது 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டநேர நேரத்தின் போதும் சளைக்காமல் ஆடி இன்னுமோர் கோலை அடித்து நிறைவில் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அந்த வகையில் தொடர்ந்து இரண்டு தடவைகள் அடுத்தடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இரண்டாவது நாடாகியது.

நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி இந்த இறுதிப்போட்டியில் ஆஜென்ரீனா அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.

அத்தோடு மூன்றாமிடத்துக்கான போட்டியில் வரும் சனிக்கிழமை மொரோக்கோ அணி குரேஷியாவை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *