வெங்கலபதக்கம் வென்ற T.சாணுயா-தமிழர்களுக்கு பெருமை…!

விளையாட்டு துறையில் இலங்கையை சேர்ந்த தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை .அப்படி கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் ஜெயிக்க தவறுவதில்லை.

அந்த வகையில் இலங்கை மற்றும் இந்திய தேசிய அணிகளுக்கிடையிலான (INDIA OPEN KARATE CHAMPIONSHIP 2023 DELHI) போட்டி டில்லியில் நடைப்பெற்றது.

இதில் பங்கு பற்றிய வட மாகாண வீராங்கணையான T .சாணுயா வெங்கலப்பதக்கத்தினை தன் வசமாக்கி கொண்டார்.

வடமாகாணத்தில் இருந்து, முதற் தடவையாக தெரிவு செய்யப்பட்டு இலங்கை தேசிய அணியில் இணைந்து, இந்திய தேசிய அணியுடன் போட்டி இட்ட T.சாணுயா வட மாகாணத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வாறு தமிழர்கள் சாதனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல தேசிய அணிகளுக்குள் இன்னும் நிறைய தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களாயின் இலங்கை இன்னும் விளையாட்டு துறையில் சிறப்பாக ஜொலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *